ஆப்நகரம்

செய்தி சேனலுக்கு மிரட்டல்..! தனிமையில் இருந்த ரவுடி பேபி தற்கொலை முயற்சி..!

கொரோனா பரிசோதைக்கு வர மறுத்த டிக்டாக் பிரபலம் சூர்யா தனது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தபோது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Samayam Tamil 22 Jun 2020, 3:48 pm
தமிழ் டிக்டாக்கில் சர்ச்சையான வீடியோக்களினால் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் கடந்த 14ம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அங்கு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர் 16ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
Samayam Tamil ரவுடி பேபி சூர்யா


வெளிநாட்டில் இருந்து உடனே நேரடியாக வீட்டுக்கு வந்த அவரை கண்ட அக்கம்பக்கத்தினர், அச்சத்தின் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அங்கு வந்த அதிகாரிகளும், போலீசாரும் சூர்யாவை முகாமிற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தனக்கு ஏற்கெனவே கொரோனா பரிசோதனை நடந்து அதில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. முகாமில் ஏசி வசதி இல்லாததால் என்னால் அங்கெல்லாம் தங்க முடியாது. நான் சிங்கப்பூரில் ஏசி அறையிலேயே தங்கி பழகிவிட்டேன். எனக்கு தனி அறை ஒதுக்கினால் நான் கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இதையடுத்து, அவரை திருப்பூர் ரயில்வே நிலையத்தில் உள்ள முகாமிற்கு அழைத்து சென்ற அதிகாரிகள், மீண்டும் சூர்யாவை வீட்டுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி, அதற்கான நோட்டீசை வீட்டில் ஒட்டி வைத்து சென்றனர்.

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யா தந்தை விடுதலை!

இதையடுத்து, கொரோனா பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்ததான வீடியோவை தனியார் செய்தி தொலைக்காட்சி வெளியிட்டது. அதை கண்டு ஆத்திரமடைந்த அவர், அந்த செய்தி சேனலையும், செய்தியாளரையும் ஆபாசமாக திட்டி, மற்றொரு வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து, சம்மந்தப்பட்ட செய்தியாளர் அளித்த புகாரின் பேரில், சூர்யா மீது கொலை மிரட்டல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி