ஆப்நகரம்

ஊழலுக்கு எதிரான போர் துவங்கும்; சென்னை உயர்மன்ற நீதிபதிகள்

ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போராட்டம் துவங்கும் நேரம் வந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

TNN 9 Dec 2017, 7:45 pm
ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போராட்டம் துவங்கும் நேரம் வந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Samayam Tamil time has come to freedom fight against corruption says chennai high court
ஊழலுக்கு எதிரான போர் துவங்கும்; சென்னை உயர்மன்ற நீதிபதிகள்


சென்னை உயர்நீதிமன்றத்தில், முனுசாமி என்ற சுதந்திர போராட்ட வீரர், தனக்கு ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்று வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை வணங்க வேண்டும் என்று கூறினார். மேலும், 14 வயதில் முனுசாமி சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்ட அரசு தரப்பு வாதத்தை நிராகரித்தனர்.

தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், முனுசாமிக்கு மத்திய அரசு இரண்டு மாதத்தில் ஒய்வூதியத்தை வழங்க வேண்டும் என்றும். ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர போராட்டம் நெருக்கும் நேரம் வந்து விட்டது என்றும் கூறினர்.

அடுத்த செய்தி