ஆப்நகரம்

20 வருடத்தில் 1,992 பேருக்கு காதல் திருமணம் செய்து வைத்த திருச்சி ஷாஜகான்

திருச்சியைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் கடந்த 20 வருடத்தில் 1,992 பேருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Feb 2018, 3:56 pm
திருச்சியைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் கடந்த 20 வருடத்தில் 1,992 பேருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tirchy karate muthukumar done love marriage over 1992 lovers
20 வருடத்தில் 1,992 பேருக்கு காதல் திருமணம் செய்து வைத்த திருச்சி ஷாஜகான்


இன்று காதலர் தினம். காதலர்களை சேரத்து வைக்கும் ஷாஜகானை படத்தில் பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் சுமார் இரண்டாயிரம் காதலர்களை சேர்த்து வைத்துள்ள ஷாஜகானை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போமா. அவர் தான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார்.

கராத்தே முத்துகுமார் என்று பரவலாக அறியப்படும் இவர், திமுக எம்.பி சிவாவின் மருமகனும் ஆவார். வழக்கறிஞரான முத்துகுமார் சாதி ஒழிப்பிற்காக கடந்த 20 ஆண்டுகளாக 1,992 காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

காதல் என்று சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் உடனே திருமணம் செய்து வைப்பதில்லை என்று கூறும் முத்துக்குமார், முதலில் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து, சட்டப்படியும் மனசாட்சிப்படியும் ஆராய்ந்து, அதன் பின்னரே திருமணம் செய்து வைக்கிறார்.

இது குறித்து முத்துகுமார் கூறுகையில், காதலர்களை சேர்த்து வைப்பதால் நிறைய அடிபட்டிருப்பதாகவும், எல்லா சமூகத்தினரும் எங்கள் மேல் கோபத்தோட இருப்பதாகவும் கூறுகிறார். மேலும்,. தன் தலையில வெட்டுக்காயம் இல்லாத இடத்தை நீங்க பார்க்கவே முடியாது என்றும் நல்ல ஆழ்ந்த தூக்கம் தூங்கி பல வருஷம் ஆகிறதாகவும் கூறுகிறார்.

என் மாமியார் கடைசியா இறக்கும் தருவாயில் கூட,";உன்னை நம்பி என் பொண்ணை கொடுத்திருக்கேன். எனக்காக, லவ் மேரேஜ் பண்ணி வைக்கறதெல்லாம் நிறுத்திடு";ன்னு சொன்னார்கள், ஆனால், நான் அதற்கு மறுத்துவிட்டேன் என்று சாதி ஒழிப்பு துணிச்சலோடு பேசுகிறார்.

அடுத்த செய்தி