ஆப்நகரம்

141 ஆண்டுகள் இல்லாத வறட்சி : வெயிலின் கோரப்பிடியில் திருச்சி , வேலூர்

தமிழகத்தில் 141 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவும் நிலையில் திருச்சி , வேலூர் போன்ற இடங்களில் வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சசித்துள்ளது.

TNN 30 Mar 2017, 6:21 pm
சென்னை : தமிழகத்தில் 141 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவும் நிலையில் திருச்சி , வேலூர் போன்ற இடங்களில் வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சசித்துள்ளது.
Samayam Tamil tiruchi vellore will be very hottest city regional meteorological center
141 ஆண்டுகள் இல்லாத வறட்சி : வெயிலின் கோரப்பிடியில் திருச்சி , வேலூர்


தமிழகத்தில் மார்ச் மாதம் கோடைக்காலம் போல வெயில் சூட்டெரிக்கிறது. மேலும் முக்கிய நீர், நிலைகள் வறண்டு காணப்படுகின்றனர். மக்களும் வெயினின் தாக்கத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஆங்காங்கே அடிப்படை உரிமையான தண்ணீர்க்காக மக்கள் அல்லாடி வருகின்றனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகாமாக இருப்பதால் மக்கள் பகல வேளையில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

இதனிடையே அடுத்த வாரங்களில் வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று 93 டிகிரி பாரன் ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 90 டிகிரி பாரன் ஹூட்க்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tiruchi, vellore will be very hottest city : regional meteorological center

அடுத்த செய்தி