ஆப்நகரம்

அதிக புற்களை உண்டதுதான் மான்கள் உயிரிழப்புக்கு காரணம்: வன அதிகாரிகள் தகவல்

திருச்சி பெல் வளாக பூங்காவில் 31 மான்கள் மரணமடைந்ததற்கு காரணம், அவைகள் உற்கொண்ட அதிகபடியான சூபால் புற்கள்தான் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 5 Nov 2018, 1:42 pm
திருச்சி பெல் வளாக பூங்காவில் 31 மான்கள் மரணமடைந்ததற்கு காரணம், அவைகள் உற்கொண்ட அதிகபடியான சூபால் புற்கள்தான் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil file71d6ehpb5nk147jjg8he-1541340139


திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் தொழிற்சாலை வளாகத்தில் புத்தாயிரம் பூங்கா உள்ளது. இங்கு 300 மான்கள் உள்ளன. ஓய்வு பெற்ற பெல் ஊழியர்கள் இந்த பூங்காவை நடத்துகின்றனர். ஆனால், விலங்குகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பூங்காவில் மான்கள் அடுத்தடுத்து இறந்து வருகின்றன. நவம்பர் 1ம் தேதி 17 மான்கள் இறந்தன. நவம்பர் 2 ஆம் தேதி மேலும் 9 மான்கள் உயிரிழந்தன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் நேற்று 4 மான்கள் இறந்தன. இப்படி கடந்த 4 நாளில் மட்டும் 30 மான்கள் இறந்துள்ளது.

இதனிடையே திருச்சி மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் முருகேசன், திருவெறும்பூர் கால்நடை மருத்துவர் சந்துரு தலைமையிலான குழுவினர் சென்று இறந்த மான்களை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இறந்த மான்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது . மான்களை பராமரிக்கும் பணியில் இருந்த ஊழியர்கள் அதிகபடியான சூபா புற்களை மான்களுக்கு கொடுத்துள்ளனர். சூபா புற்களை அகத்து கீரை போன்ற மற்ற தாவர வகைகளுடன் கலந்து கொடுப்பதுதான் உணவளிக்கும் முறை. ஆனால் காப்பகத்தின் ஊழியர்கள் அப்படி செய்யாததால், மான்களுக்கு உடலில் புரோத சத்து அதிகமாகி அஜீரனம் ஏற்பட்டுள்ளது. இதனால் மான்கள் இறந்துள்ளன.

இதுதொடர்பாக காப்பகத்தின் அதிகாரி கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி