ஆப்நகரம்

திருச்சி: ஜல்லிக்கட்டு காளைக்கு இப்படிலாமா மரியாதை செய்வாங்க..!

திருச்சி மணப்பாறையை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, பல்வேறு மரியாதைகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Samayam Tamil 7 Mar 2020, 2:50 pm
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைபட்டியைச் சேர்ந்த குமார் ராஜா. இவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்தார். இந்த காளை பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுச் சிறந்து விளங்கியது. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அந்த ஜல்லிக்கட்டு காளை நேற்று மதியம் உயிரிழந்தது.
Samayam Tamil WhatsApp Image 2020-03-07 at 2.11.59 PM (1).


இதையடுத்து அந்த காளைக்கு மாலை அணிவித்து பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் காளை இறந்த தகவல் அறிந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பலரும் அங்கு வந்து இறந்த காளையை வணங்கி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பற்றி எரியும் வட சென்னை: அடுத்தடுத்து தீ விபத்துகள்!

இறுதியாகக் காளைக்கு இறுதிச் சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்ட பின்னர் ஊர்வலமாகத் தூக்கிச் செல்லப்பட்டு அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


காளை அடக்கம் செய்யப்பட்டபோது உரிமையாளர், கிராம மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களையும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அடுத்த செய்தி