ஆப்நகரம்

தமிழுக்கு பதிலாக, மலையாளம்... ரயில்வேயின் அடுத்த அதிரடி...

தெற்கு ரயில்வேயில் தொடரும் மொழி சர்ச்சை...

Samayam Tamil 16 Nov 2019, 12:47 pm
தென்னக ரயில்வே தனது அலுவலக மொழியாக ஆங்கிலம் அல்லது இந்தியைப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழிகளையும் ரயில்வேத்துறை வழக்கமாகப் பயன்படுத்தி வருகிறது.
Samayam Tamil TAMIL


இதன்படி, தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் மொழிக்குப் பதிலாக மலையாள மொழி பதிவிடப்பட்டு பயணிகளை ரயில்வேத்துறை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதன் காரணமாக, ரயில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் குழுப்பமடைந்தனர்.

இன்னொரு பெண்ணுக்கு இது நடக்கக்கூடாது: ஐஐடி மாணவியின் தந்தை உருக்கம்!

திருச்சியில், ரயில்வே முன்பதிவு விண்ணப்பப் படிவத்தில் ஆங்கிலம், இந்தி தவிர மலையாள மொழியில் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது. இதனால் வழக்கமாக, தமிழ் மொழியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பழக்கப்பட்டவர்கள், அதிர்ச்சியடைந்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

பெரும்பாலானோர் படிவத்திலிருந்த 3 மொழிகளும் தெரியாமல், விண்ணப்பத்தைக் கையில் வைத்த கொண்டு விழித்துக் கொண்டிருந்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக முன் நாட்களில் நடந்த போராட்டத்தில் திருச்சி தலைநகராக விளங்கியது. இவ்வாறு மொழிப் போராட்டத்தின் முக்கிய நகரமாக விளங்கும் திருச்சியில் ரயில் முன்பதிவு விண்ணப்பப் படிவம் மலையாளத்தில் வழங்கப்பட்டது, தமிழ் மொழி ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

காட்டு யானைகள் செய்த சேட்டை, டிரான்பார்மரில் பறந்த தீப்பொறி... வீடியோ உள்ளே!

இதுகுறித்து தென்னக ரயில்வே வட்டாரத்தில் விசாரித்தபோது, 'கேரளா மாநிலத்திற்குச் செல்ல வேண்டிய முன்பதிவு விண்ணப்பப் படிவங்கள் தமிழ்நாட்டுக்குத் தவறுதலாக வந்து விட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழில் விண்ணப்பப் படிவங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது' என்றனர்.

அடுத்த செய்தி