ஆப்நகரம்

நெல்லை: தமிழ்வழியில் படித்த துப்புரவு தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை!

நெல்லையைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளி பாஸ்கர் என்பவரின் மகன் சுதாகர், தமிழ் வழிக்கல்வியில் படித்து நீட் தேர்வில் சாதனை புரிந்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றார்.

Samayam Tamil 11 Jul 2018, 1:34 pm
நெல்லையைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளி பாஸ்கர் என்பவரின் மகன் சுதாகர், தமிழ் வழிக்கல்வியில் படித்து நீட் தேர்வில் சாதனை புரிந்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றார்.
Samayam Tamil sudhakar neet3


நெல்லை மாவட்டம் பழைய பேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்த பாஸ்கர் – சிவசக்தி தம்பதியரின் இரண்டாவது மகன் சுதாகர் (19). இவர் அங்குள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தார். கடந்த 2016ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய இவர், 1,046 மதிப்பெண்கள் பெற்றார்.

அப்போது பொறியியல் படிக்க பாஸ்கர் திட்டமிட்டிருந்த அவர், உடல்நிலை சரியில்லாமல் போனதால், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியவில்லை. பின்னர், மருத்துவம் படிப்பில் சேர்ந்து மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளோடு, தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார், ஏழ்மை நிலையில் இருந்து அவரது பெற்றோரால், பயிற்சிக்கான கட்டணம் செலுத்த முடியவில்லை. இருந்தபோதிலும், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற சுதாகரின் கனவை நிறைவேற்றுவதற்காக, வங்கியில் கடன் வாங்கி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்தனர்.
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்த சுதாகரால், ஆங்கிலத்தில் இருந்த நீட் தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள கடும் சிரமத்துக்குள்ளானார். இதனால், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் மட்டும் பெற்றார். இதனால், மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதனையடுத்து மனம் தளராத சுதாகர், விடா முயற்சியோடு தொடர்ந்து அடுத்த நீட் தேர்வுக்கு படித்தார்.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சிறப்பாக எழுதி, 303 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் 4,582 இடத்தை பெற்றார். இதனால் அவருக்கு தற்போது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான ஆணை கிடைத்துள்ளது

அடுத்த செய்தி