ஆப்நகரம்

நிறுத்தப்பட்ட அணு உலை: தமிழகத்துக்கு மின்சாரம் பாதிப்பு!

கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு கிடைக்கும் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 31 May 2020, 6:23 pm
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. அதில், முதல் அணு உலை தொடர்ந்து ஓராண்டாக இயங்கியதால் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிறுத்தப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையால் அணுமின் நிலையத்தில் ஊழிர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், முதல் அணு உலையின் வருடாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கியது.

இதனிடையே கடந்த 12ஆம் தேதி முதல் அணு உலையில் டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு 14ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கி மின் உற்பத்தி நடந்து வந்தது.

தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: இ-பாஸ் கட்டாயம்!

இந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணிக்கு முதல் அணு உலை மீண்டும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில் 920 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி