ஆப்நகரம்

நெல்லையில் சிக்கினார் புரோட்ட சூரி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா பிரியர்களின் கவனத்தை கவர புதுமையான போட்டி நடத்தப்பட்டுள்ளது.

TNN 11 Aug 2016, 7:21 pm
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா பிரியர்களின் கவனத்தை கவர புதுமையான போட்டி நடத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil tirunelveli finds new parotta soori
நெல்லையில் சிக்கினார் புரோட்ட சூரி


வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட பாணியில், ’நம்ம ஊரு பரோட்ட சூரி யாரு?’ என்ற பெயரில் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்டு அதிக புரோட்டா சாப்பிடுபவருக்கு ரூ.5001 பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்ட்டிருந்தது.

பல்வேறு ஊர்களிலிருந்து இதற்காகவே வந்த பலர் போட்டி போட்டு புரோட்டா சாப்பிட்டனர். ஆனால் எவரும் 10 புரோட்டாவுக்கு மேல் சாப்பிடவில்லை.

சிங்கையை சேர்ந்த கோதர் மைதீன் என்ற வாலிபர் மொத்தம் 42 புரோட்டக்களை சாப்பிட்டார். வேறு யாரும் அதற்கு மேலஆன எண்ணிக்கையில் புரோட்டாக்களை சாப்பிடாததால் அவருக்கு ரூ.5001 பரிசளிக்கப்பட்டது.

பரிசுத்தொகையைப் பெற்றுக்கொண்ட கோதர் மைதீன், ‘இந்த போட்டிய அடிக்கடி நடத்துங்க’ என்று கூறி கடைக்காரரையும் பொதுமக்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி