ஆப்நகரம்

கழிவு மேலாண்மையில் 100 சதவீதம்: நெல்லை சாதனை

தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலி 100% மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் அகற்றப்பட்டு இந்தியாவிலேயே முதல் சுகாதாரமிக்க நகரமாக சாதனை படைத்துள்ளது.

TNN 6 Mar 2017, 12:42 pm
திருநெல்வேலி: தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலி 100% மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் அகற்றப்பட்டு இந்தியாவிலேயே முதல் சுகாதாரமிக்க நகரமாக சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil tirunelveli first to have 100 waste segregation
கழிவு மேலாண்மையில் 100 சதவீதம்: நெல்லை சாதனை


இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி, ரேடியோ உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து அகற்ற மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாடு முழுவ்தும் இது போன்று மக்களும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து மாநகராட்சி அல்லது நகராட்சி ஊழியர்களிடம் அளிக்குமாறு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்து வருகிறது. அவ்வாறு பிரித்து தராவிட்டால் குப்பையை அகற்றமாட்டோம் என உள்ளாட்சி நிர்வாகங்கள் கடும் எச்சரிக்கையையும் பிறப்பித்துள்ளன.

சுமார் 4.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட நெல்லை நகரிலும் இதுபோன்ற ஒரு திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரம், மற்றும் பணிகள் கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினம் முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 5 மாதங்களில் நெல்லை நகரம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு சுகாதார நகரமாக மாறியுள்ளது. இதன் காரணமாக நாட்டிலேயே 100% மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து தரும் ஒரே நகரமாக திருநெல்வேலி மாறியுள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் இது சாத்தியமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், அனைத்து வீடுகளுக்குமே இரு வகையான குப்பை தொட்டிகளை வினியோகித்தோம். தினமும் மட்கும் குப்பைகளை வீடுகளுக்கே சென்று மாநகராட்சி தொழிலாளிகள் எடுத்து வருவார்கள். மட்காத குப்பைகளை புதன்கிழமைதோறும் எடுப்பார்கள். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு வெறும் 8 வீடுகள் மட்டுமே குப்பையை பிரித்து தரவில்லை. இதை பார்த்து எங்களுக்கே ஆச்சரியமாகிவிட்டது. இப்போது 100% வீடுகளிலும் குப்பை பிரித்தே அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் சுமார் 1.60 லட்சம் வீடுகள் உள்ளன. ஐந்தே மாதங்களில் அனைத்து வீடுகளிலும் குப்பை பிரித்தளிக்கப்பட்டு வருகிறது. மட்காத குப்பைகளால், மழை நீர் நிலத்தடிக்குள் செல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடுகிறது. இதை தவிர்க்கவே குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

It took barely a few months for Tirunelveli municipality in Tamil Nadu to achieve the feat of achieving 100% segregation of waste at source across households and establishments.

அடுத்த செய்தி