ஆப்நகரம்

கடத்தப்பட்ட குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.!

நெல்லை பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தையை, போலீசார் இரண்டு மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

TNN 22 Oct 2017, 11:35 am
நெல்லை பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தையை, போலீசார் இரண்டு மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Samayam Tamil tirunelveli police recued kidnappaed baby within hour
கடத்தப்பட்ட குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.!


திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தனது உறவினர்களை வழியனுப்புவதற்காக தன் இரு குழந்தைகளுடனும், நேற்றிரவு நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, தனது 2 வயது மகள் ஜெயஸ்ரீயை காணாமல் அதிர்ச்சியடைந்த அவர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, நெல்லை சந்திப்பிலிருந்து, செல்லும் வாகனங்களை சோதனையிட்ட போலீசார், செய்துங்கநல்லூர் சென்ற பேருந்தில் சந்தேகத்துக்குரிய வகையில், குழந்தையுடன் இருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அது காணாமல் போன ஜெயஸ்ரீ என்பது தெரியவந்தது. குழந்தையை மீட்ட போலீசார், நாட்டார்குளத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கிடைத்ததும் துரிதமாக செயல்பட்ட போலீசார், இரண்டே மணி நேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து குழந்தையை மீட்க முயற்சிகள் மேற்கொண்ட, பாலம் காவல்நிலைய ஆய்வாளர் உதயசூரியனின் மிகசிறப்பான பணியை அப்பகுதி மக்கள் பாரட்டி வருகின்றனர்.

Tirunelveli police recued kidnappaed baby within hour.

அடுத்த செய்தி