ஆப்நகரம்

ரூ.10 லட்சம் பணம், 13 சவரம் நகை; நெல்லையில் இளம்பெண் செய்த காரியத்தைப் பாருங்க!

சென்னை: இளம்பெண் ஒருவர் தனது காதலனை ஏமாற்றி, பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி சென்றுள்ளார்.

Samayam Tamil 18 Nov 2018, 6:18 pm
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் உமா. இவர் நாகர்கோவிலில் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். அப்போது சோதிரி ராஜா என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil Cheating


அப்போது தனது குடும்பத்தின் வறுமையை காரணம் காட்டி, ஏராளமாக பணம் வாங்கியுள்ளார். ஒருகட்டத்தில் தனது பணியை விட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு நகை ஒன்றை பரிசாக வழங்கி, தொடர்ந்து பண உதவி செய்து வந்தார்.

இதையடுத்து திடீரென ராஜாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தளபதி சமுத்திரத்தைச் சேர்ந்த சிவா என்பவரை உமா திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ராஜா, உடனே அவளது கணவரிடம் சென்று பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கான வங்கி மற்றும் நகை ரசீதுகளைக் காட்டியுள்ளார். ஆனால் உமாவின் கணவர் சிவா, ராஜாவை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து புதுமணத் தம்பதிகள் மீது ராஜா போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் இருவரையும் கைது செய்து, போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி