ஆப்நகரம்

முதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...

திருப்பதியில், முதலில் குறும்படம் எடுத்து பின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 8 Nov 2019, 1:55 am
ஆந்திரா, நெல்லூரை சேர்ந்தவர்கள் ஷேக் சூரி,சுமன். இவர்கள் நெல்லூர் ஸ்மார்ட் கன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து அதன் மூலம் குறும்படம் எடுத்து வந்துள்ளனர். அதேபோல், இந்த நிறுவனம் தயாரிக்கும் குறும்படத்தில் நடிக்க முன் வரும் இளம்பெண்களுக்கு விரைவில், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும் என விளம்பரமும் செய்துள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட பல இளம் பெண்கள், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற ஆசையில் மயங்கி ஷேக், சுமன் வலையில் விழுந்தனர்.
Samayam Tamil sssafaa


சட்டம் ஒண்ணும் அவங்களோட தனிச் சொத்து அல்ல... பாஜகவை வெச்சு செய்யும் சிவசேனா !!

நடிக்க வந்த பெண்களிடம் மேலும், ஆசையைத் தூண்டும் வகையில் பேசி, அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். பல பெண்களை வெவ்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களைத் தனது ஆசைக்குப் பணிய வேண்டும் என நிலைக்குத் தள்ளி, பல்வேறு வழிகளில் தொல்லை செய்துள்ளனர். இந்த செயல்களை, அந்த 2 பேரும் சேர்ந்து தங்கள் மொபையில் போனில் படம் பிடித்து வைத்துள்ளனர். அந்த வீடியோக்களை வைத்து, சில தரகர்களைத் தயார் செய்து சம்பந்தப்பட்ட பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் படம் பிடித்த ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இதுதொடர்பான தகவல் நெல்லூர் காவல்துறையினருக்குக் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நெல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நான்கு விபச்சார விடுதிகளில் இன்று அதிரடி சோதனையை காவல்துறையினர் நடத்தினர்.

மருத்துவர்களின் மலச்சிக்கல் நடனம்..!! குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் வீடியோ..

இந்த வழக்குத் தொடர்பாக, மொத்தம் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுப்படுத்தபப்ட்டிருந்த பல பெண்களை மீட்டு, அவர்களை விடுதிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி