ஆப்நகரம்

570 கோடி பணம் பறிமுதல் வழக்கு ஒத்திவைப்பு

570 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை சிபிஐக்கு மாற்ற கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

TOI Contributor 29 Jun 2016, 9:51 pm
570 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை சிபிஐக்கு மாற்ற கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
Samayam Tamil tiruppu money seized case
570 கோடி பணம் பறிமுதல் வழக்கு ஒத்திவைப்பு


சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
திமுக தாக்கல் செய்திருந்த மனுவில், இந்தப்பணம் தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஹவாலா பணம் என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தனிநபர் தொடர்பான எந்தவொரு புகாரும் இல்லை என்றும், இந்த வழக்கிற்கு சிபிஐ விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி