ஆப்நகரம்

திருப்பூரில் கோயில் பிச்சைக்காரரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது!

திருப்பூர் மாவட்டத்தில் கோயில் பிச்சைக்காரரை தாக்கிய புகாரின்பேரில், அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 Aug 2016, 12:42 am
திருப்பூர் மாவட்டத்தில் கோயில் பிச்சைக்காரரை தாக்கிய புகாரின்பேரில், அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tiruppur admk functionary arrested for allegedly attacking beggar
திருப்பூரில் கோயில் பிச்சைக்காரரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது!


அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் முன்பாக, பிச்சை எடுத்து வரும் தண்டபாணி (வயது 70) என்பவரே தாக்கப்பட்டவர். இவரோடு அந்த பகுதியில் சுமார் 50க்கும் அதிகமானோர் பிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், லிங்கேஸ்வரர் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான நடராஜன் (வயது 50) என்பவர், தண்டபாணியை பிச்சை எடுக்கக்கூடாது என்றும், தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த தண்டபாணி அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த அவிநாசி போலீசார் நடராஜனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

அடுத்த செய்தி