ஆப்நகரம்

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை !

திருப்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN & Agencies 15 Dec 2017, 12:14 pm
திருப்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tiruppur atm was broken and money was taken out
திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை !


திருப்பூர் அருகேயுள்ள மண்ணாரை பகுதியில் ஸ்டேட் பாங்க் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்-ஐ பல நாட்கள் பார்வையிட்ட மர்மநபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட திட்டமிட்டுள்ளனர். புதன்கிழமை இரவு ஏ.டி.எம்.மின் கண்காணிப்பு கேமிராவை உடைத்தகொள்ளையர்கள், பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதிக சத்தம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கு வந்துள்ளனர்.

சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தால் கோவை மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி