ஆப்நகரம்

10வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்; தார் சாலையில் ஏர் பூட்டிய விவசாயிகள்!

திருப்பூர்: தொடர் போராட்டத்தில் சாலையில் ஏர் பூட்டி நூதன முறையில் விவசாயிகள் போராடினர்.

Samayam Tamil 26 Dec 2018, 4:58 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து, மின்சாரம் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனைக் கண்டித்து, கடந்த 17ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு விவசாய நிலங்களை பாதுகாத்திட கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களது போராட்டத்தில் தினந்தோறும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 10ஆம் நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டத்தின் போது, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஏர் கலப்பையில் எருதுகளை பூட்டி தார் சாலையில் ஏர் உழும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் போராட்டம் நடைபெறும் பந்தலை சுற்றி கருப்பு துணி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி