ஆப்நகரம்

தலித் பெண் சமைக்க எதிர்ப்பு: 87 பேர் மீது வழக்குப்பதிவு!

தலித் பெண் சமைக்க எதிர்ப்பு தெரிவித்த 87 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Jul 2018, 1:24 pm
திருப்பூர்: தலித் பெண் சமைக்க எதிர்ப்பு தெரிவித்த 87 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 10


திருப்பூரின் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், அருந்ததியர் சமூகத்தின் பாப்பாள் சமையல் பணியாளர் திங்கள் கிழமை வேலைக்கு சேர்ந்தார். இதை தெரிந்து கொண்டஅந்த ஊர் மக்கள், பாப்பாள் சமைக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, அவரை பணியிட மாற்றம் செய்தார். இதற்கு எதிர்ப்புகிளம்ப பாப்பாளை மீண்டும் அதே பள்ளிக்கு மாற்ற மாவட்ட சார் ஆட்சியர் உத்தரவிட்டார். தவிர, தலைமை ஆசிரியை, வளர்ச்சி அதிகாரி ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாப்பாளை வேலை செய்ய விடாமல் தடுத்த 87 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

tiruppur opposition raises against sc woman to cook case filed against 87

அடுத்த செய்தி