ஆப்நகரம்

இறந்த போன காளைக்கு கோயில் கட்டி வழிபட விவசாயி முடிவு

வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தை சேர்ந்த விவசாயி சோமசுந்தரம், இறந்த போன தனது காளைக்கு இறுதிச்சடங்கு நடத்தியதுடன், கோவில் கட்டி வழிபடவும் முடிவு செய்துள்ளார்.

TNN 12 Sep 2017, 3:20 pm
வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தை சேர்ந்த விவசாயி சோமசுந்தரம், இறந்த போன தனது காளைக்கு இறுதிச்சடங்கு நடத்தியதுடன், கோவில் கட்டி வழிபடவும் முடிவு செய்துள்ளார்.
Samayam Tamil tirupur farmer building a temple for his bull animal
இறந்த போன காளைக்கு கோயில் கட்டி வழிபட விவசாயி முடிவு


திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சோமசுந்தரம். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபுரம் கால்நடை சந்தையில் 1½ வயதுடைய காங்கேயம் இன காளைக்கன்று ஒன்றை விலைக்கு வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

சோமசுந்தரம் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரும் அந்த காளையை அதிக பாசத்துடன் வளர்த்துள்ளனர். அது பூச்சிக்காளை ஆன பின்பு அந்த காளையின் கம்பீரமும், வனப்பும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1 லட்சத்துக்கு அந்த காளையை பலர் விலைக்கு கேட்டுள்ளனர். ஆனால் அதிஷ்டமான காளை என்பதால் அதை விற்பதற்கு சோமசுந்தரம் மறுப்பு தெரிவித்து விட்டார். ‘பூச்சி’ என்று பெயர் சூட்டி செல்லமாக அந்த காளையை இவர்கள் வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக அந்த காளை நேற்று முன்தினம் மாலை இறந்தது.

உடனடியாக தனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு காளை இறந்த தகவலை தெரிவித்தார். பின்னர், காளையை குளிப்பாட்டி நெற்றியில் பொட்டு வைத்து அலங்கரித்தனர். பின்னர் வாழைக்கன்றுகளை சுற்றிலும் கட்டி, கழுத்தில் மாலைகள், கொம்புகளை சுற்றிலும் சலங்கை, ரூபாய் நோட்டு மாலை என காளையை அலங்கரித்து, யாகம் வளர்த்து இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

இதுகுறித்து விவசாயி சோமசுந்தரம் கூறியதாவது,
நான் மட்டுமல்ல எனது மனைவி, மகள் ஆகியோரும் மிகவும் பாசத்தோடு காளையை வளர்த்தோம். ஆனால் வயது முதிர்வால் அது எங்களை விட்டு பிரிந்துவிட்டது. இறுதி சடங்கு நடத்தி காளையை புதைத்து விட்டோம். அந்த இடத்தில் கோவில் கட்டி வழிபட முடிவு செய்துள்ளேன் என்றார்.
இந்த காலத்தில் மனிதர்களுக்கே மதிப்பில்லாத நிலையில் காளைக்கு இறுதிச்சடங்குச் செய்து கோயில் கட்ட நினைக்கும், விவிசாயி சோமசுந்தரத்தை நினைத்து வெள்ளங்கோயில் வாசிகள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Tirupur Farmer building a temple for his bull .

அடுத்த செய்தி