ஆப்நகரம்

மக்களை காலில் போட்டு மிதிக்கும் தமிழக அரசு! போராட்டத்தை தொடங்கியுள்ள பொதுமக்கள்!!

மதுவிற்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காத தமிழக அரசு மீண்டும் மீண்டும் மதுக்கடைகளை நிறுவி வருகிறது.

TOI Contributor 13 Jun 2017, 8:59 pm
மதுவிற்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காத தமிழக அரசு மீண்டும் மீண்டும் மதுக்கடைகளை நிறுவி வருகிறது.
Samayam Tamil tirupur people started agitation against tasmac
மக்களை காலில் போட்டு மிதிக்கும் தமிழக அரசு! போராட்டத்தை தொடங்கியுள்ள பொதுமக்கள்!!


திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நடைபெற்ற டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மக்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகு சாமளாபுரத்தில் டாஸ்மாக் அமைப்பதை தமிழக அரசு கைவிட்டது.

ஆனால் போராட்டம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் சாமளாபுரம் பகுதிக்கு அருகில் உள்ள காளிபாளையம் எனும் இடத்தில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

அடுத்த செய்தி