ஆப்நகரம்

திருப்பூரில் 6ம் வகுப்பு மாணவனை தாக்கி ஊக்கை விழுங்கச் செய்த அவலம்!

திருப்பூர் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவனை தாக்கி ஊக்கை விழுங்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Jan 2018, 3:23 pm
திருப்பூர் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவனை தாக்கி ஊக்கை விழுங்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tirupur school student beat junior student and torture to swallowing pin
திருப்பூரில் 6ம் வகுப்பு மாணவனை தாக்கி ஊக்கை விழுங்கச் செய்த அவலம்!


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சாலை சுகுமார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் வருண். கொங்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளியின் கழிவரைக்கு சென்று சிறுநீர் கழித்த போது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வந்த 4 மாணவர்கள் வருணை தாக்கியதோடு, அவரது வாயில் ஊக்கை போட்டு விழுங்க வைத்து விட்டு, அந்த நால்வரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக, வருண் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர்.



அதில், வருணின் வயிற்றில் ஊக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவர் வருணுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வருணின் பெற்றோர் குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த 4 மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி