ஆப்நகரம்

திருப்பூர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நிருபர் சாலை விபத்தில் பலி..!

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்த ராஜசேகரன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Jan 2020, 7:34 pm
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (32). இவர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் திருப்பூர் நிருபராக பணியாற்றி வந்தார். ராஜசேகருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததையடுத்து அவரது மனைவி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
Samayam Tamil திருப்பூர்டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் சாலை விபத்தில் பலி



இதனால் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஆர்வமாக இருந்த ராஜசேகரன், அதற்கான பத்திரிக்கையை அடித்து உறவினர்களை அழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பத்திரிகை கொடுப்பதற்காக ராசேகரன் தனது தாய், சகோதரியுடன் காரில் சென்றுள்ளார்.


பாஜக பிரமுகர் கொலை, தீண்டாமை கொடுமை என வழக்குப் பதிவு

பின்னர் அங்கிருந்து திருப்பூருக்கு வந்துகொண்டிருக்கையில் கார் நரியம்பள்ளி புதூர் என்ற பகுதியில் இருந்த வளைவில் திரும்பியபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரது தாய், சகோதரி மற்றும் ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜசேகரின் மரணத்திற்கு பத்திரிக்கையாளர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவருடைய மரணத்திற்கு சமயம் தமிழ் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நலம் பெற வேண்டிகொள்கிறது.

அடுத்த செய்தி