ஆப்நகரம்

சுற்றுப்புறத் தூய்மை மீது ஆர்வம் கொண்ட சிறுமியை, தனது நாற்காலியில் அமரவைத்த ஆட்சியர்!

தனது நாற்காலியில் சிறுமியை அமரவைத்து, மாவட்ட ஆட்சியர் அழகு பார்த்துள்ளார்.

Samayam Tamil 5 Feb 2018, 5:58 am
திருவண்ணாமலை: தனது நாற்காலியில் சிறுமியை அமரவைத்து, மாவட்ட ஆட்சியர் அழகு பார்த்துள்ளார்.
Samayam Tamil tiruvannamalai district collector gives respect to cleanliness girl
சுற்றுப்புறத் தூய்மை மீது ஆர்வம் கொண்ட சிறுமியை, தனது நாற்காலியில் அமரவைத்த ஆட்சியர்!


திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் பூஜா(14). இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு சுற்றுப்புறத் தூய்மை குறித்து மிகுந்த ஆர்வம் உண்டு. அதுமட்டுமல்லாமல், ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஏழை மாணவர்களுக்கு மாலையில் இலவச வகுப்புகள் எடுக்கிறார்.

இதற்கிடையில் சுற்றுப்புறத் தூய்மை குறித்து பல்வேறு புத்தகங்களை படித்து கட்டுரை ஒன்றை எழுதினார்.

இதனை விளக்கிக் கூற நேரம் ஒதுக்குமாறு ஆட்சியருக்கு கடந்த மாதம் 31ல் கடிதம் எழுதினார். இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பூஜாவை வரவழைத்துள்ளார்.

ஒருமணி ஆலோசித்து, பூஜாவின் திட்டங்களை கேட்டறிந்தார். இதனால் ஆட்சியர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் தான் அமர்ந்திருந்த இருக்கையில், அவரை அமரச் செய்து சிறுமியை கௌரவித்தார்.

Tiruvannamalai District Collector gives respect to Cleanliness girl.

அடுத்த செய்தி