ஆப்நகரம்

மருத்துவரை சிறை பிடித்த விவகாரம்: நடவடிக்கை கோரி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

மருத்துவரை சிறை பிடித்த விவகாரத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பை சேர்ந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TOI Contributor 10 Jan 2017, 4:22 pm
திருவண்ணாமலை: மருத்துவரை சிறை பிடித்த விவகாரத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பை சேர்ந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil tiruvannamalai govt hospital doctors boycott work demanding action against office bearers of differently abled federation
மருத்துவரை சிறை பிடித்த விவகாரம்: நடவடிக்கை கோரி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் அவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. ராகவானந்தன் எனும் மருத்துவர் அந்த முகாமில் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது, காயத்துடன் அங்கு வந்த சிவக்குமார் என்பவர், தனக்கு மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் வேண்டும் என கேட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் ராகவானந்தன், காயம் குணமடைந்த பின் வருமாறும், அப்போது தான் முழுமையாக சோதனை செய்து சான்றிதழ் வழங்க முடியும் என கூறியுள்ளதாக தெரிகிறது. அதேபோல், மேலும் இருவருக்கும் அவர் அவ்வாறே கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பை சேர்ந்த அலுவலர்களான, வெங்கடேசன், ரமேஷ் மற்றும் குமார் ஆகியோர், மாற்றுத் திறனாளிகள் சிலருடன் சேர்ந்து மருத்துவர் ராகவானந்தனை சிறை பிடித்துள்ளனர். இதனால் பதட்டமடைந்த ராகவானந்தன், டீன் ஜெயந்தியை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். விவரத்தை கேட்ட டீன் ஜெயந்தி, ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரேவை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு அங்கு வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்பட பலர் கூறியும், மாற்றுத் திறனாளிகள் மருத்துவரை விடவில்லை. தொடர்ந்து பல மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், அவரை விடுவித்துள்ளனர். அதுவரை சாப்பிடாமல் இருந்த மருத்துவர் ராகவானந்தன், மயக்க நிலைக்கு சென்றதாகவும், மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பை சேர்ந்த அலுவலர்களான வெங்கடேசன், ரமேஷ் மற்றும் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வெங்கடேசனிடம் கேட்ட போது, அரசாணைகளை காட்டிய போதும், விவரத்தை எடுத்துக் கூறியும், தகுதியான நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்க அந்த மருத்துவர் மறுத்ததாக குற்றம் சாட்டினார்.

ஆட்சியரின் தனி உதவி அலுவலர் கூறியும், அதனை அந்த மருத்துவர் ஏற்கவில்லை. பின்னர், வேறு ஒரு மருத்துவர் வந்து 80 சதவீதம் ஊனம் இருப்பதாக சிவக்குமாருக்கு சான்றிதழ் வழங்கினார் என்றும் வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார்.
Tiruvannamalai govt hospital doctors boycott work demanding action against office-bearers of differently abled federation

அடுத்த செய்தி