ஆப்நகரம்

கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகிவிட்டது: இளங்கோவன் தகவல்

கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டது என்றும் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பார் என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Jul 2018, 7:16 pm
கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டது என்றும் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பார் என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tks-ilangovan34-11-1497171110


சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த இரண்டு நாள்களாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி தொடர் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சேர்க்கும் முடிவை மருத்துவ சிறப்புக் குழுவினர் எடுத்தனர்.

கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த கோபாலபுரம் இல்லத்துக்கு வெள்ளிகிழமை இரவு சுமார் 12. 20 மணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,அவரது மனைவி துர்கா ஸ்டாலின், டாகடர் கோபால், சென்னை காது-முக்கு– தொண்டை மற்றும் முதியோர் நல மருத்துவ சிறப்புக் குழுவினர் முதலில் வந்தனர்.இதனையடுத்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கோபாலபுரத்தில் இருந்த தொண்டர்கள், பத்திரிக்கையாளர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் ஆழ்வார்ப்பேட்டை காவிரி மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அதிகாலை 1.15 மணிக்கு அவர்அழைத்துச் செல்லப்பட்டு 1.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “காவேரி மருத்துவமனையில் கருணாநிதி 2 நாட்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பார்; அவருக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டது” என்று கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி