ஆப்நகரம்

கருணாநிதிக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்: மேற்குவங்க எம்.பி.

சென்னை வந்த மேற்குவங்க எம்.பி. டெரிக் ஓ பிரையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

Samayam Tamil 29 Jul 2018, 11:15 am
சென்னை வந்த மேற்குவங்க எம்.பி. டெரிக் ஓ பிரையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.
Samayam Tamil index


சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த மூன்று நாள்களாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி தொடர் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சேர்க்கும் முடிவை மருத்துவ சிறப்புக் குழுவினர் எடுத்தனர்.

கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த கோபாலபுரம் இல்லத்துக்கு வெள்ளிகிழமை இரவு சுமார் 12.20 மணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,அவரது மனைவி துர்கா ஸ்டாலின், டாகடர் கோபால், சென்னை காது-முக்கு– தொண்டை மற்றும் முதியோர் நல மருத்துவ சிறப்புக் குழுவினர் முதலில் வந்தனர். இதனையடுத்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கோபாலபுரத்தில் இருந்த தொண்டர்கள், பத்திரிக்கையாளர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் ஆழ்வார்ப்பேட்டை காவிரி மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அதிகாலை 1.15 மணிக்கு அவர்அழைத்துச் செல்லப்பட்டு 1.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நலம் பற்றி அறிய ஏராளமான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே காத்திருக்கிறனர். பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னை வந்த மேற்குவங்க எம்.பி. டெரிக் ஓ பிரையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன்; அவர் குணமடைய மேற்கு வங்க மக்கள் சார்பில் பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி