ஆப்நகரம்

நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் பூஞ்சாணங்கள்: தமிழக வேளாண்துறை அறிமுகம்

நூற்புழுக்களை கட்டுப்படுத்தி, மண்வளத்தை மேம்படுத்த உதவும் பூஞ்சாணங்களை தமிழக வேளாண்துறை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளது.

TNN 6 Apr 2017, 9:46 pm
நூற்புழுக்களை கட்டுப்படுத்தி, மண்வளத்தை மேம்படுத்த உதவும் பூஞ்சாணங்களை தமிழக வேளாண்துறை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளது.
Samayam Tamil tn agriculture dept produces pesticide to control thread warms
நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் பூஞ்சாணங்கள்: தமிழக வேளாண்துறை அறிமுகம்


மண்ணிற்கு அடியில் உள்ள பயர்களின் வேரை துளைத்து, தாக்கியழிக்கும் நூற்புழுக்களின் பாதிப்பு தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது. விளைநிலங்களில் சுழற்சி முறை விவசாயத்தை பின்பற்றாமல் வணிக நோக்கத்திற்காக, ஒரே வகை பயிரினத்தை பயிரிடுவதே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இதனால், நூற்புழுக்கள் ஊக்கம்பெற்று, பல்கிப் பெருகுவதை தடுக்க முடியாத சூழல் உள்ளது. நெற்பயிர்கள், காய்கறிகள், என பலவற்றையும் தாக்கும் இந்த நூற்புழுக்கள், பயிர்களை விஷத்தன்மை கொண்டதாக மாற்றிவிடுகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது புதிய பூஞ்சாணத்தை, தமிழக வேளாண்துறை இனப்பெருக்கம் செய்துள்ளது. கோவையில் உள்ள தமிழக வேளாண்துறை சிறப்பான முறையில் தயாரித்துள்ள இந்த பூஞ்சாணம், மண் வழியாக, பயிர்களில் வேரில் ஊடுருவி, நூற்புழுக்களின் முட்டைகளை எளிதாக தாக்கி, அழிக்கும் எனக் கூறப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் இந்த பூஞ்சாணம் பயன்தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Agriculture dept produces pesticide to control thread warms.

அடுத்த செய்தி