ஆப்நகரம்

திருச்சியில் விவசாயத்துறை அதிகாரி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி: விவசாய விரிவாக்க மையம் ஒன்றில், அதில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 1 Oct 2018, 8:45 pm
திருச்சி மாவட்டம் மன்னார்குடி அடுத்த சேரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(46). இவர் மன்னார்குடி அருகே வல்லூரில் உள்ள விவசாய விரிவாக்க மையத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
Samayam Tamil Suicide


இன்று காலை 9 மணிக்கு வழக்கம் போல் அலுவலகம் சென்றுள்ளார். இந்நிலையில் 9.45 மணியளவில் பாதுகாவலர் பாக்யராஜ், முருகேசன் உயரமான கதவின் உச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டுள்ளார்.

இதையடுத்து மற்ற அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே திருமாகோட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

முருகேசன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை அவரது தற்கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

TN agriculture officer commits suicide in office.

அடுத்த செய்தி