''நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம்,'' என, அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.
அதிமுகவின் 51வது ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: மின் கட்டணம், சொத்து வரி உயர்வு என, தொடர் தாக்குதலால், திமுக ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது.
அதிமுகவில் தலைவர்கள் இருப்பார்கள்; மறைவார்கள்; கட்சிக்கு என்றுமே அழிவு இல்லை. கட்சியின் எலும்பாகவும், சதையாகவும், உயிராகவும் தொண்டர்கள் இருக்கின்றனர். எத்தகைய நிர்வாகிக்கும் பதவி நிரந்தரமானது அல்ல; செயல் இல்லாவிட்டால் தூக்கி எறியப்படுவர். கட்சி நிர்வாகிகள், ஒற்றுமையுடன் பாடுபட்டு, வெற்றியை தேடித் தர வேண்டும்.
தற்போதுள்ள சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படலாம்; கட்சியினர் 'பூத் கமிட்டி' அமைத்து, தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் பதவிக்காலம், 2026 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிமுக தலைவர்கள் பலர், மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் 51வது ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
அதிமுகவில் தலைவர்கள் இருப்பார்கள்; மறைவார்கள்; கட்சிக்கு என்றுமே அழிவு இல்லை. கட்சியின் எலும்பாகவும், சதையாகவும், உயிராகவும் தொண்டர்கள் இருக்கின்றனர். எத்தகைய நிர்வாகிக்கும் பதவி நிரந்தரமானது அல்ல; செயல் இல்லாவிட்டால் தூக்கி எறியப்படுவர். கட்சி நிர்வாகிகள், ஒற்றுமையுடன் பாடுபட்டு, வெற்றியை தேடித் தர வேண்டும்.
தற்போதுள்ள சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படலாம்; கட்சியினர் 'பூத் கமிட்டி' அமைத்து, தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் பதவிக்காலம், 2026 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிமுக தலைவர்கள் பலர், மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.