ஆப்நகரம்

வேல்முருகன்... இந்த மிரட்டல்லாம் விடக்கூடாது... எனக்கு தெரியும்- சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை!

சட்டமன்ற கூட்டத்தொடரில் துணைக் கேள்வி கேட்பது தொடர்பாக வேல்முருகன் பேசியதற்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார்.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 6 Apr 2023, 12:55 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழக சட்டமன்றத்தில் வேல்முருகன் கடும் வாக்குவாதம்
  • துணைக் கேள்வி கேட்க அனுமதிக்குமாறு கோரிக்கை
  • ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டதாக சபாநாயகர் விளக்கம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Appavu vs Velmurugan
Appavu vs Velmurugan
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய தினம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தமிழ் வளர்ச்சி / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ”எண்: 116, உறுப்பினர் சிவகாம சுந்தரி அவர்கள், போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள்” என்று சபாநாயகர் அப்பாவு கூறி அவர்களை பேச அழைப்பு விடுத்தார்.
வேல்முருகன் கோரிக்கை

அப்போது, ”இவ்வளவு நேரம் கேட்கிறேன். என்னை பேச அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன் எழுந்து கோரிக்கை விடுக்கிறார். அதற்கு, ”உட்காருங்க முன்வரிசையில் தான. நீங்க உட்காருங்க” என்கிறார் சபாநாயகர். மேலும் ”துணை கேள்வி கேட்க யாருக்கு கொடுக்கணும்னு எனக்கு தெரியும். உட்காருங்க” என மீண்டும் கூறுகிறார். ஆனால் வேல்முருகன் விடவில்லை.
தட்ட வேண்டிய இடத்தில் தட்டிய எடப்பாடி: நாடாளுமன்றத்தில் நிலக்கரி சுரங்கம் விவகாரம்!
சத்தம் போடக் கூடாது

உடனே ”சத்தத்தை எல்லாம் ரைஸ் பண்ணக் கூடாது. உட்கார்ந்து கொண்டு இந்த வார்த்தையை எல்லாம் பேசக் கூடாது. மிரட்டல்லாம் விடக் கூடாது. உட்காருங்க” என அப்பாவு கூறுகிறார். ”நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அனுமதி தரவே மாட்டீங்கறீங்க. தொடர்ந்து அலைகழித்து கொண்டே இருக்கிறீர்கள். இதென்ன நியாயம்” என்பது போல் வேல்முருகன் கேட்கிறார்.

அவைக் குறிப்பில் ஏறாது

நீங்கள் பேசுவது எதுவுமே அவைக் குறிப்பில் ஏறாது” என சபாநாயகர் கூறி விடுகிறார். ”அவைக் குறிப்பில் ஏறாது என்பது எங்களுக்கு தெரியும்” என கோபமாக பேசி விட்டு அமர்ந்து விடுகிறார் வேல்முருகன். இந்த விவகாரம் அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் பேசத் தொடங்கிய அமைச்சர் சிவசங்கர், கிருஷ்ணராயபுரம் தொகுதி கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தரங்கம்பட்டியில் புதிய பேருந்து பணிமனை அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று கூறினார்.

மீண்டும் கண்டிப்பு

இருப்பினும் சலசலப்பு ஓயாத நிலையில் சபாநாயகர் அப்பாவு மீண்டும் கண்டிப்பான விளக்கத்தை கொடுத்தார். அதாவது, ”உறுப்பினர் வேல்முருகன்... கடந்த 24ஆம் தேதி, 28ஆம் தேதி, 30ஆம் தேதி, 31ஆம் தேதி என துணைக் கேள்வி மட்டும் 4 முறை தந்துள்ளேன்.
அதிமுக அவசர செயற்குழு அறிவிப்பு: என்னென்ன விவாதிக்கப்படும்?
மற்ற எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு

இதுபோக முன்வரிசையில் வரக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் தொடர்பாக பேச அனுமதித்துள்ளேன். தினமும் உங்களுக்கு தான் கேள்வி வர வேண்டும். துணைக் கேள்வி வர வேண்டும் என்ற மரபு கிடையாது. பல உறுப்பினர்கள் இன்னும் ஒரு கேள்வி கூட கேட்காமல் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கிறேன்.

எனவே கேள்வி நேரத்தில் தேவையில்லாமல் இப்படி பேசக் கூடாது. விவாதம் போன்று பேச வேண்டாம். இதுக்கு மேலும் வாய்ப்பு கொடுக்க முடியாது. பாகுபாடு இல்லாமல் வாய்ப்பு தந்து கொண்டிருக்கிறோம். பெரிய சத்தமெல்லாம் அவையில் போடக் கூடாது பார்த்துக்கோங்க
” என அப்பாவு கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி