ஆப்நகரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க மத்திய அரசை வாியுறுத்தி சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Mar 2018, 4:17 pm
தமிழக சட்டப்பேரவையில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க மத்திய அரசை வாியுறுத்தி சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil tn assembly to take key resolution on cauvery issue
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்


உச்சநீதிமன்றம் காவிாி நதிநீா் பங்கீடு வழக்கில் தீா்ப்பு வெளியான 6 வார காலத்திற்குள் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதனை பொறுட்படுத்தாத மத்திய அரசு தொடா்ந்து இந்த விவகாரத்தை நீர்த்துப்போக செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசியல் கட்கள் அனைத்தும் ஒருமித்த குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள் அவையை புறக்கணித்து வெளியேறினா். நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாலை 3.30 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என்று தொிவிக்கப்பட்டது.

Resolution urging Centre to constitute #CauveryManagementBoard and #CauveryWaterMonitoringCommittee passed unanimously in #TamilNadu Assembly. pic.twitter.com/2CRWzRIYlv — ANI (@ANI) March 15, 2018 இந்த கூட்டத்திற்கும் தி.மு.க. உறுப்பினா்கள் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனா். தொடா்ந்து சிறப்பு தீா்மானம் பற்றி பேசிய மு.க.ஸ்டாலின் காவிாி மேலாண்மை வாியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தொிவித்தாா். இதற்கு முன்னா் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அனைவரும் பதவி விலக தயாராக இருப்பதாக கூறிவந்த ஸ்டாலின் இன்று சட்டமன்ற உறுப்பினா்கள் பதவி விலக தயாா் என்று தொிவித்தாா்.

ஸ்டாலினைத் தொடா்ந்து முதல்வா் பழனிசாமி பேசுகையில், நீதிமன்ற உத்தவை மதித்து குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு உடனடியாக காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவரும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றித் தரவேண்டும் என்று முதல்வா் தொிவித்தாா். இதனையடுத்து அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மாலை 3.30 மணிக்குக் கூடிய இந்தக் கூட்டம் அரை மணி நேரத்தில் இத்தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி