ஆப்நகரம்

Sabarimala: பொன். ராதாவை அவமதித்த கேரள போலீஸ்; குமரியில் நாளை பாஜக போராட்டம்- தமிழிசை

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்து, கேரளா போலீஸை கண்டித்து நாளை பாஜக சார்பில் போராட்டம் அறிவிப்பு

Samayam Tamil 22 Nov 2018, 4:55 pm
சபரிமலையில் வைத்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை அவமித்த கேரளா காவல்துறையினரை கண்டித்து, கன்னியாகுமரியில் பாஜக சார்பில் நாளை முழு அடைப்பு ஆர்பாட்டம் நடத்தப்படும் என தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
Samayam Tamil pon-radha
கன்னியாகுமரியில் நாளை பாஜக முழு அடைப்பு போராட்டம்


மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றார். நிலக்கல் சென்ற அவர் பம்பை செல்ல முயற்சித்தார். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த அதிகாரிகள், அமைச்சர் வாகனத்தை மட்டுமே பம்பைக்கு அனுமதிக்க முடியும் என்றும், அவருடன் வந்தவர்கள் கேரள அரசு பேருந்து மூலம் பம்பைக்கு செல்ல வலியுறுத்தினார்.

ஆனால் இந்த கோரிக்கையை ராதாகிருஷ்ணன் உடன் வந்தவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும், போலீசாருடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கருத்து கூறிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கேரள அரசு பக்தர்களுக்கு தேவையில்லாத சிரமங்களை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய போது, பம்பையில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போதும் போலீஸாருக்கும், பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது அமைச்சரின் கார் என்று தெரிந்ததை அடுத்து, போலீஸார் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.

இன்று சென்னை தி.நகரில் செதியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்திரராஜன், சபரிமலையில் கேரள போலீசார், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை அவமதித்துவிட்டனர். பக்தர்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பதிலாக அவர்களை தடுக்கும் நடவடிக்கை நடந்து உள்ளது. இதனால் கேரளா அரசைக் கண்டித்து நாளை கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி