ஆப்நகரம்

நம்ம ஊரு பொங்கல்; தமிழக பாஜகவின் அடுத்த வியூகம்!

தமிழக மக்களை ஈர்க்கும் வகையில் பொங்கலை மையமாக வைத்து தமிழக பாஜக களமிறங்கியுள்ளது.

Samayam Tamil 10 Jan 2021, 4:56 pm
அடுத்த சில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. நடிகர் ரஜினியின் அரசியல் வருகையை தமிழக பாஜக பெரிதும் எதிர்பார்த்திருந்தது. ஆனால் அவர் உடல்நலனைக் காரணம் காட்டி விலகிக் கொண்டார். இதனால் அதிமுக கூட்டணியை நம்பி இருக்கும் சூழல் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் தனக்கான வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை களப்பணியாற்றி வருகிறது. தமிழக ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் வகையில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இதற்கு பக்கபலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசனைகளும் இருந்து வருகின்றன.
Samayam Tamil Namma Ooru Pongal


சமீபத்தில் ’வெற்றிவேல் யாத்திரை’ என்ற பெயரில் முருகனை மையப்படுத்தி பாஜகவினர் அரசியல் செய்தனர். ஆனால் இது தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த சூழலில் ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற பெயரில் அடுத்த வியூகத்தை தமிழக பாஜக கையிலெடுத்துள்ளது. தமிழர்களின் மிகப்பெரிய பண்டிகையாக தைப் பொங்கல் திகழ்கிறது. பயிர்களின் அறுவடையை மையமாகக் கொண்டு கொண்டாடப்படும் இந்த பண்டிகையை, வாக்குகளை அறுவடை செய்வதற்கான களமாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனிப்பான செய்தி; தமிழக முதல்வரின் அதிரடி!

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொங்கல் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை தமிழக பாஜக நடத்தி வருகிறது. இதன் தொடக்க விழா ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 9) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சிறப்பித்தார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் ‘நம்ம ஊரு பொங்கல்’ பண்டிகையை இரண்டு நாட்கள் விழாவாக நாங்கள் கொண்டாடி வருகிறோம்.

இதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். பெண்களுக்கான திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது என்றார். மதுரை மற்றும் புதுக்கோட்டையில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையில் நடிகை குஷ்பு பங்கேற்றார். இவற்றில் பெண்கள் பெருவாரியாக திரண்டு பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

17 வருடங்கள் கழித்தும் ட்ரெண்டிங்கில் கமல்!!

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக ஐடி விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அனைத்து மாவட்ட கிளைகளும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் பாஜகவிற்கு ஆதரவான நபர்களை வரவழைத்து உரையாற்ற ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை எங்களுடன் எளிதில் இணைத்துக் கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி