ஆப்நகரம்

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஒரு தரமான சம்பவம்: ரஜினி பாணியில் தமிழிசை டுவீட்

நள்ளிரவில் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ! புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி ! தரமான சம்பவம்என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Feb 2019, 10:52 am
நள்ளிரவில் நடந்துள்ள சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தரமான சம்பவம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamiliai


கடந்த 14ம் தேதியன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதி வழியாக செல்லும் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் வாகன அணிவகுப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில், தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பபட்ட காரை ஓட்டிச் சென்று ராணுவ பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் ராணுவ பேருந்து வெடித்து 41 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பயங்கரவாத முகாம்கள் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள் மூலம், பயங்கரவாத முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்தன. 12 விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த அதிரடி சர்ஜிக்கல் தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாபர்பாத் .உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் வேரோடு அழிக்கப்பட்டன. மேலும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் கட்டுபாட்டு அறையும் தகர்க்கப்பட்டன.

விமானப்படையின் இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு, பாஜக மாநில தலைவர் தமிழிசை ரஜினிகாந்த் பாணியில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘நள்ளிரவில் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ! புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி ! தரமான சம்பவம்! 1000 கிலோ வெடி பொருட்கள்.. 4 இடங்கள்.. மொத்த முகாம்களும் காலி.. வெளுத்தெடுத்த இந்தியா’ இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி