தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இது “800” என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எழுத்தாளர் ஜெயபாலன், சீமான், பாரதிராஜா, தியாகு, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் சிங்களவர்களுடன் ஒருவராக முரளிதரன் வாழ்ந்தவர். இவர் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறியிருக்கிறார்.
தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக கொலை செய்த ராஜபக்சாவின் ஒலிபெருக்கி போன்று செயல்பட்டவர். எனவே தமிழர்களின் உணர்வுகளை மதிப்பளித்து இப்படத்தில் இருந்து உடனே விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் பழனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் எந்த தவறும் இல்லை.
குஷ்பு தனது எதிரிகளைத் தாக்க, எங்களைக் காயப்படுத்துவது சரியில்லை!
ஒரு கலைஞன் எந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது தனிப்பட்ட உரிமை. இதை அரசியலாக்கக் கூடாது என்று கூறினார். மேலும் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து குஷ்பு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசுகையில், தமிழகத்தில் கொள்கை ரீதியான உடன்பட்டுள்ள கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழலைப் பொறுத்து புதிதாக கட்சிகள் இணையலாம். தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக உள்ளது என்று அண்ணாமலை கூறினார்.
தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக கொலை செய்த ராஜபக்சாவின் ஒலிபெருக்கி போன்று செயல்பட்டவர். எனவே தமிழர்களின் உணர்வுகளை மதிப்பளித்து இப்படத்தில் இருந்து உடனே விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் பழனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் எந்த தவறும் இல்லை.
குஷ்பு தனது எதிரிகளைத் தாக்க, எங்களைக் காயப்படுத்துவது சரியில்லை!
ஒரு கலைஞன் எந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது தனிப்பட்ட உரிமை. இதை அரசியலாக்கக் கூடாது என்று கூறினார். மேலும் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து குஷ்பு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசுகையில், தமிழகத்தில் கொள்கை ரீதியான உடன்பட்டுள்ள கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழலைப் பொறுத்து புதிதாக கட்சிகள் இணையலாம். தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக உள்ளது என்று அண்ணாமலை கூறினார்.