ஆப்நகரம்

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

விருதுநகா் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 நபா்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.

Samayam Tamil 25 Feb 2019, 3:41 pm
விருதுநகா் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 நபா்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
Samayam Tamil Hearth Transplant


விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்தவா் தேவகி. இவா் கடந்த 17ம் தேதி விபத்தில் சிக்கி மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்த தேவகி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தொிவித்தனா்.

மூளைச்சாவு அடைந்த தேவியின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இருப்பதால் உடலுறுப்பு தானம் செய்து சிலருக்கு மறு வாழ்வு கொடுக்கலாம் என்று மருத்துவா்கள் அறிவுரை கூறினா். இதனை ஏற்றுக் கொண்ட தேவகியின் உறவினா்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தொிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து சுமாா் 5 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னா் தேவகியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு 5 நபா்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. அதன்படி சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெற்வேறு நோயாளிகளுகு்குமம், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி கிட்னி கோ் சென்டரில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

கண்கள் மதுரை அரவந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி