ஆப்நகரம்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

TNN 10 Jan 2018, 8:03 pm
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Samayam Tamil tn bus strike will continue says transport labour unions
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் வரவுள்ளது. இதனால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

மனசாட்சிப்படி யோசித்து, ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசு அறிவித்துள்ள 2.44 ஊதிய உயர்வு காரணியை தற்காலிகமாக ஏற்கிறோம்.

ஆனால் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்தால் பணிக்கு திரும்புகிறோம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், வேலைநிறுத்தம் தொடரும்.

நாளை உயர்நீதிமன்ற விசாரணைக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

TN Bus Strike will continue says Transport Labour Unions.

அடுத்த செய்தி