ஆப்நகரம்

கூடுதுப்பா அமைச்சரவை, ஒரே பரபரப்பாவே இருக்கே!

கொரோனா நேரத்தில் கூடும் கூட்டங்கள் அனைத்தும் முக்கியத்துவம் பெற்றுவரும் சூழலில், இப்போது எதற்காக என்பது குறித்த தொகுப்பு...

Samayam Tamil 14 Jul 2020, 9:02 am
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. கூட்டத்தில் தொழில் முதலீடு, நீட் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
Samayam Tamil முதல்வர்

முதல்வர் பழனிசாமி



தமிழ்நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 4 மாதங்களாக பெரும்பாலான அரசு அலுவலகங்கள் தொடங்கி அனைத்தும் முடங்கிக் கிடக்கிறது. பலர் வேலை இழந்து பணம் ஈட்ட முடியாமல் சோற்றுக்கே சிரமப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் அவ்வப்போது தமிழ்நாடு அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வை இந்த ஆண்டு நடத்தக் கூடாது என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம்.

நீட் விலக்கு குறித்து முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்தகட்டமாகத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளன.

கொரோனா: எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு?

அதேவேளை மாநிலத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல்களையும் தமிழ்நாடு அரசு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை குறித்து பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது.

இது தொடர்பான விவாதங்கள் கூட்டத்தில் பேசப்படுமா என்பது கேள்விக் குறிதான். அதேபோல் ஊரடங்கு குறித்தும் இப்போது நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. வழக்கமாக கொரோனா காலத்தில் கூடும் அமைச்சரவை மக்கள் மத்தியில் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது.

அடுத்த செய்தி