கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள், கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக கல்லூரிகளின் ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, திட்டமிடப்படாத ஊரடங்குகளால் பொருளாதாரமே நொறுங்கி, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிட்டது என சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் குடும்பத்திற்கு ரூ.5000, நகை, விவசாயக்கடன்கள் ரத்து, மின்கட்டணச் சலுகை, செமஸ்டர் ரத்து போன்ற ஆக்கபூர்வ முடிவுகளை முதல்வர் எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன் தொடர்சியாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக அமைச்சர்கள் கேபி அன்பழகன் தங்கமணி செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிவி சண்முகம் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கொரோனா பயமே இல்லையா? இப்படி ஓடிவந்து குவிந்த மக்கள் - அடுத்த ஹாட்ஸ்பாட்டா?
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டம் குறைப்பு, சுழற்சி முறை வகுப்புகள், பள்ளிகள் திறக்கப்படும் தேதி உள்ளிட்டவை குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. வல்லுநர் குழுவின் இந்த பரிந்துரைகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, திட்டமிடப்படாத ஊரடங்குகளால் பொருளாதாரமே நொறுங்கி, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிட்டது என சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் குடும்பத்திற்கு ரூ.5000, நகை, விவசாயக்கடன்கள் ரத்து, மின்கட்டணச் சலுகை, செமஸ்டர் ரத்து போன்ற ஆக்கபூர்வ முடிவுகளை முதல்வர் எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன் தொடர்சியாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக அமைச்சர்கள் கேபி அன்பழகன் தங்கமணி செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிவி சண்முகம் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கொரோனா பயமே இல்லையா? இப்படி ஓடிவந்து குவிந்த மக்கள் - அடுத்த ஹாட்ஸ்பாட்டா?
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டம் குறைப்பு, சுழற்சி முறை வகுப்புகள், பள்ளிகள் திறக்கப்படும் தேதி உள்ளிட்டவை குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. வல்லுநர் குழுவின் இந்த பரிந்துரைகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.