ஆப்நகரம்

தலைமைச் செயலாளர் கலெக்டர்களுக்கு பிறப்பித்த முக்கிய உத்தரவு!

தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 15 Oct 2021, 4:14 pm
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்திருப்பதே ஆகும்.
Samayam Tamil irai anbu ias


ஞாயிறு தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் இந்த வாரம் மட்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. “இதுவரை 67% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல் போல் தமிழ்நாட்டில் 70% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஸ்டாலின் முடிவால் சசிகலாவுக்கு சிக்கல்: எடப்பாடி கப் சிப்!

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, தூத்துக்குடி, திருப்பத்தூர் மாவட்டங்களில் 35 சதவீதம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம் மாவட்டங்களில் 36 சதவீதம்

நெல்லை மாவட்டத்தில் 37 சதவீதம்

தென்காசி, தஞ்சை புதுக்கோட்டையில் 38 சதவீதம்

வேலூர், தர்மபுரியில் 38 சதவீதம்

நாகை, மதுரை, திருவாரூர், மாவட்டங்களில் 39 சதவீதம்

சேலம், கடலூரில் 40 சதவீதம்

சிவகங்கை மாவட்டத்தில் 41 சதவீதம்

தீபாவளி பண்டிகை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த குட் நியூஸ்!

திண்டுக்கல், அரியலூர், திருச்சி கிருஷ்ணகிரியில் 45 சதவீதம்

சென்னையில் 60 சதவீதம்

கோவையில் 61 சதவீதம்

நீலகிரி மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி