ஆப்நகரம்

முதல்வர் பழனிசாமி கருணாநிதிக்கு புகழாஞ்சலி

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

Samayam Tamil 3 Jan 2019, 12:24 pm
கடந்த ஆண்டு ஆக.,7ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் மாலை 6.10 மணியளவில் காலமானார். அவர் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்தனர். அவரது மறைவைத் தொடர்ந்து அவரது திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.
Samayam Tamil முதல்வர் பழனிசாமி கருணாநிதிக்கு புகழாஞ்சலி
முதல்வர் பழனிசாமி கருணாநிதிக்கு புகழாஞ்சலி


இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் முதவர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் புகழாஞ்சலி செலுத்தினர். கருணாநிதி-எம்ஜிஆர் நட்பு, கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஆகியவற்றைப்பற்றி துணை முதல்வர் ஓபிஎஸ் நினைவுகூர்ந்து புகழாஞ்சலி தெரிவித்துள்ளார்.

சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்தவர் கருணாநிதி. அதை அதிமுக சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முதல்வர் பழனிசாமி புகழாரம் செலுத்தியுள்ளார். பன்முக தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி, 5 முறை தமிழக முதல்வராக இருந்த பெருமைக்குரியவர்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி அரசியல் எல்லைகளைக் கடந்து முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மீது மிக்க அன்பும் மரியாதையும் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதியில் அழகுத்தமிழுக்கு மயங்காதவர் எவரும் இல்லை.

பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதி பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பி. பத்திரிகை, இலக்கியம், கவிதை என பல துறைகளில் பணியாற்றி தமிழுக்கு தொண்டாற்றியவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி