ஆப்நகரம்

Mettur Dam: மேட்டூர் அணை நீரை பாசனத்திற்கு திறந்து விடுகிறார் முதல்வர்!!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திறந்து விடுகிறார்.

Samayam Tamil 19 Jul 2018, 10:54 am
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திறந்து விடுகிறார்.
Samayam Tamil மேட்டூர் அணை நீரை பாசனத்திற்கு திறந்து விடுகிறார் முதல்வர்!!
மேட்டூர் அணை நீரை பாசனத்திற்கு திறந்து விடுகிறார் முதல்வர்!!


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபிணி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டின. இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் அணைக்கு 1.14 லட்சம் கனஅடி நீர்வரத்து இருந்ததால், 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை 104 அடியையும், மொத்த கொள்ளளவான 93.47 டி.எம்.சியில் 69 டி.எம்.சியும் நிரம்பியது.

இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுகிறது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைக்கிறார். முதல் கட்டமாக 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுப்படுகிறது.

இதனிடையே, மேட்டூர் அணை கட்டிய 84 ஆண்டுகளில், டெல்டா பாசனத்திற்காக முதல்வர் நீரை திறந்து விடுவது இதுவே முதல்முறையாகும்.

அடுத்த செய்தி