ஆப்நகரம்

காவிரி ஆற்றில் கழிவு நீர்: கர்நாடகாவுக்கு கடிதம் எழுதிய இறையன்பு

கர்நாடக தலைமை செயளாளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 29 Apr 2023, 11:46 am
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவிரி ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் அதிக அளவில் கலக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச் சூழல் மாசடைகின்றன. அந்த நீர் தான் தமிழ்நாட்டிற்கு வந்து பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர், மற்றும் விவசாய பாசனத்துக்கு பயன்படுகிறது.
Samayam Tamil irai anbu ias


இந்நிலையில் காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக தலைமை செயளாளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி: மோதிப் பார்க்க கிளம்பிய சீமான்
“காவிரியில் நடப்பு ஆண்டு 2022 - 23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இந்த ஆண்டு 484 டி.எம்.சி கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது.

இந்நிலையில், பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வலியுறுத்தல்: என்ன செய்யப் போகிறார் வைகோ?
எனவே, காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்” என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி