ஆப்நகரம்

இறையன்பு கொடுத்த ஐடியா: உடனே ஓகே சொன்ன மோடி!

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கொடுத்த ஐடியாவுக்கு பிரதமர் மோடி உடனே ஓகே சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 30 Jun 2022, 12:46 pm
தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டது பலரது பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. அதன்படி, பதவியேற்றது முதலே சிறப்பான நடவடிக்கைகளை இறையன்பு மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil பிரதமர் மோடி, இறையன்பு
பிரதமர் மோடி, இறையன்பு


இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கொடுத்த ஐடியாவுக்கு பிரதமர் மோடி உடனே ஓகே சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்ற முதல் தேசிய மாநாடு இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் அண்மையில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அரசு இயந்திரம் முறையாக இயங்குவதற்கு தலைமைச் செயலாளர்களின் பங்கு முக்கியமானது என்பதாலும், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மாநாடு என்பதாலும் அந்த மாநாடு கவனம் ஈர்த்தது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா மாநாட்டில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்ஸும் கலந்து கொண்டார். அப்போது, ஐறையன்பு உடன் பிரதமர் மோடி தனியாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வரின் ஒப்புதலோடு தமிழக வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பிரதமரிடம் ஒரு அறிக்கையையும் இறையன்பு அப்போது சம்ர்பித்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் இறையன்புவின் சகோதரர் ஆவார். குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அவர், அம்மாநிலத்தின் முதல்வராக மோடி இருந்தபோது, அவரது ஆட்சியில் முக்கிய துறைகளின் அதிகாரியாக பணியாற்றியவர். அத்துடன், மோடியின் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்து, அவருக்கு நெருக்கமான ஒருவராகவும் அறியப்பட்டார். இதனால், இறையன்புவை பற்றியும், அவரது பணிகள் பற்றியும் பிரதமர் மோடி நன்றாகவே தெரியும் என்கிறனர் கோட்டை வட்டாரத்தில்.

பிரதமர் மோடி - இறையன்பு இடையேயான பேச்சுவார்த்தையின் போது, ஸ்ரீபெரும்புதுாருக்கு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பது பற்றி பேசப்பட்டதாகவும், அப்போது, அந்த விமான நிலையத்தை சென்னையிலிருந்து மெட்ரோ ரயில் மூலம் இணைக்கலாம் என இறையன்பு ஆலோசனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பாராட்டிய பிரதமர் மோடி, இதற்கு எவ்வளவு நிதி செலவாகும் என கேட்டு, அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் போது, அதற்கான நிதி ஒதுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த செய்தி