ஆப்நகரம்

ரேஷன் கடையில் மேலும் ஒன்று இலவசமாக கிடைக்க போகுது..!

கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் மிக அவசியமாக உள்ளதாக அரசு வலியுறுத்தும் நிலையில் அதனை ரேஷன் கடையில் இலவசமாக வழங்க பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 2 Jun 2020, 4:34 pm
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் உள்ளது. அதே சமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது. அதுகுறித்த ஆலோசனைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil ரேஷன் கடையில் இலவசமாக மாஸ்க்


இந்த ஆலோசனையில் சென்னையின் 15 மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மிக குறைவு. இதுவரை 56% பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 0.80% தான்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைத்து வருகிறது. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்திலும் ரேஷனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது.

கொரோனா: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை; ஆளுநரை சந்திக்கும் முதல்வர்!

இதுவரை 2.7 லட்சம் பிசிஆர் கிட்கள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்படும் என கூறினார். முதல்வர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இது முக்கிய அறிவிப்பாக கருதப்படுகிறது.

கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே தடுக்கும் மாஸ்க்கை அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்றால் அது இலவசமாக கிடைப்பது அவசியமானதாகும். மேலும், இதனால் ஏழை, எளிய மக்களும் பயனடைவர்.

அடுத்த செய்தி