ஆப்நகரம்

மீனவர்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்கள்; உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை!

மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவி செய்யுமாறு முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

TNN 2 Dec 2017, 3:48 pm
சென்னை: மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவி செய்யுமாறு முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil tn cm asked central home minister to spend more helicopters for fishermen rescue
மீனவர்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்கள்; உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை!


கன்னியாகுமரி அருகே உள்ள கடல்பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதற்கிடையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 500 மீனவர்களைக் காணவில்லை என்று, குமரி மாவட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தேடும் பணியில் ஈடுபட்டு, மீனவர்களை மீட்டு தருமாறு குமரி மாவட்ட மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்படை, கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கூடுதல் ஹெலிகாப்டர்களை மீட்பு பணியில் ஈடுபடுத்துமாறு, மத்திய உள்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொலைபேசியில் பேசிய போது, ஒகி புயல் தொடர்பாக முதலமைச்சரிடம் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

மீனவர்களை மீட்க அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடிக்க 11 படகுகளில் சென்ற 86 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று புகார்கள் வந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

TN CM asked Central Home Minister to spend more helicopters for fishermen rescue.

அடுத்த செய்தி