ஆப்நகரம்

விவசாயிகள் கோரிக்கையை கருணையுடன் பரிசீலியுங்கள்: தமிழக முதல்வர்

விவசாயிகள் கோரிக்கையை கருணையுடன் பரிசீலியுங்கள் என்று மத்திய அரசிடம் தமிழக முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

TNN 23 Apr 2017, 4:58 pm
டெல்லி: விவசாயிகள் கோரிக்கையை கருணையுடன் பரிசீலியுங்கள் என்று மத்திய அரசிடம் தமிழக முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil tn cm asks pm modi to solve farmers issue immediately
விவசாயிகள் கோரிக்கையை கருணையுடன் பரிசீலியுங்கள்: தமிழக முதல்வர்


டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை வசமுள்ள 133 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீட் உட்பட பொதுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார். பயிர்க் காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை தேவை என்றும், பழங்குடியின மாணவர்களுக்கான ரூ.1,882 கோடி உதவித்தொகையை தர வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

TN CM asks PM Modi to solve farmers issue immediately.

அடுத்த செய்தி