ஆப்நகரம்

"நீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” -அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி..!

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

TNN 3 Mar 2017, 2:10 pm
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
Samayam Tamil tn cm edapadi panaisamy meets minister prakash javadekar
"நீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” -அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி..!


இன்று சென்னை வந்திருந்த அவரை,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர்.இந்த சந்திப்பானது சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பின் போது நீட் தேர்வை நடத்தக்கூடாது அல்லது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.இதனையடுத்து தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து மொத்தமாக தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கு பதிலாக,கடந்த ஆண்டு அளிக்கப்பட்டது போல,இந்த ஆண்டு மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN CM Edapadi Panaisamy meets minister Prakash Javadekar

அடுத்த செய்தி