ஆப்நகரம்

சேலம் ஆலை பற்றி மோடிக்கு எடப்பாடி புத்திமதி

சேலம் இருப்பு உருக்கு ஆலையை தனியார் மயமாக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

TNN 16 Dec 2017, 9:35 pm
சேலம் இருப்பு உருக்கு ஆலையை தனியார் மயமாக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil tn cm edappadi palanisami writes to pm modi on salem mill privatisation
சேலம் ஆலை பற்றி மோடிக்கு எடப்பாடி புத்திமதி


இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

சேலம் இரும்பு உருக்காலையை தனியார் மயமாக்க சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த ஆலை தமிழகத்தின் முக்கிய தொழிற்சாலை என்றும் இதனைத் தனியார்மயமாக்கிவிட்டால் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் (2016-17) சேலம் இருப்பு ஆலையின் நிதிநிலை மேம்பட்டுள்ளது. தமிழக அரசு உதவியோடு ரூ.2,005 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன என்றும் எடப்பாடி எடுத்துரைத்திருக்கிறார்.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஆலையை லாப ஈட்டும் திசையில் வழிநடத்திச் செல்ல வாய்ப்பளிக்கும் விதமாக தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

அடுத்த செய்தி